தூக்கி எறியப்பட்டேன் அவள் வாசலில் இருந்து,
எங்கு விழுந்து கிடக்கிறேன் என்று தெரியவில்லை எனக்கு !!!
பாதை மட்டும் தெரிந்தால் போதும்
என் கால்கள் தன் வேலையை துவங்கும்!!!
உன் கண் சிமிட்டல் ஒன்று போதும்
கலங்கரை விளக்கம் போல எனக்கு!!!
கரை ஒதுங்கும் பிணத்தை போல மிதந்து மிதந்து வருகிறேன் !!!
வந்தவுடன் உன் மௌனம் ஒன்று போதும்
ஏன் வந்தாய் ? என்ற கேள்வி மட்டும் வேண்டாம்!!!
இப்படிக்கு அன்புடன்,
நடமாடும் பிணம்

0 comments:
Post a Comment